Friday, September 5, 2008

ஊராட்சி மன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பொறுப்புகளில்
27ஆவது கடமை - தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் மேம்பாடு
  • ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான திட்டங்களை அந்த துறையினரோடு சேர்ந்து நிறைவேற்றுதல்.

  • ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான சுடுகாடுகளை அமைத்தல்.

  • . வீட்டு வசதியினை உருவாக்கித் தருதல்.

  • இவர்களுக்கு வீட்டுக்கொரு மின்விளக்கு கிடைக்க ஏற்பாடு செய்தல்.

  • கலப்புத் திருமணங்களை ஆதரித்து ஏற்பாடு செய்தல்.

  • இவர்களுக்கு சிறு வியாபாரங்களை ஏற்பாடு செய்தல்.

  • இம்மக்களுக்கு சமுதாயக் கூடங்கள் கட்டுதல்.

  • இம்மக்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டங்களான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்துதல்.

  • பிணைத் தொழிலாளர்களை விடுவித்து மறுவாழ்வு தருதல்.

  • இம்மக்களின் கல்வித்தரம் ஆராயப்பட்டு உயர்த்தப்படுதல்.

  • இம்மக்களின் குழந்தைகளில் பள்ளி இடைநிற்போர் எண்ணிக்கைகளைக் குறைத்தல்.

  • இச்சமூக சிறுவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கு திட்டங்கள் வகுத்து நிறைவேற்றுதல்.

  • இதற்கென சிறப்புப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்துதல்

  • இச்சமூக மக்கள் படிக்கும் பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு ஒன்றிய நிர்வாகத்திற்கு உதவி செய்தல்.

  • இச்சமூக மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு பயனாளிகளை தேர்வு செய்தல்.

  • புதிய பள்ளிகள், மாணவர் விடுதிகள் ஏற்பாடு செய்தல், விடுதிகளை ஆய்வு செய்தல்.

  • புதிய வீட்டு மனைகள் வழங்க ஏற்பாடு செய்து, இடம் ஒதுக்கித்தருதல்.

  • தெருவிளக்குகள் ஏற்பாடு செய்தல்.

  • இம்மக்களை தொழில் முனைவோராக்குவதற்குப் பயிற்சிகள் ஏற்பாடு செய்தல்.

  • இம்மக்களை வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்துதல். இம்மக்கள் எல்லா பொது இடங்களிலும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்தல்.

  • ஊர் மக்கள் அனைவருக்கும் இந்த சமத்துவ மனநிலை ஏற்பட பாடுபடுதல்.

  • பஞ்சமி நிலங்களை மீட்டுத் தருதல்.

  • பிணங்களை தூக்கிச் செல்லுதல், பறை அடித்தல், பிணக்குழி தோண்டுதல் போன்ற வேலைகளை இம்மக்களே செய்ய வேண்டும் என்ற சமூக வற்புறுத்தலை தவிர்த்தல்.

  • நில உச்சவரம்பு சட்டத்தினால் இம்மக்களுக்கு பயன் கிடைக்க வகை செய்தல்.

  • கிராம சமூக ஒத்துழைப்போடு தீண்டாமை ஒழிப்பை உறுதிப்படுத்துதல்.

  • தொண்டு நிறுவனங்களை இப்பணிக்கு ஈடுபடுத்துதல்.


  • மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இழி செயலை தவிர்த்தல்.

  • தற்போதுள்ள பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேற்பார்வையிட்டு தரம் பராமரித்தல்.

  • முதலமைச்சரின் சிறப்பு விருதுகள் பெறுவதற்கான மாணவர்களை அடையாளம் கண்டு உதவுதல். .