Monday, September 15, 2008

ஊர் மூப்பன், வண்டாரி, குறுதலை ,மண்னுக்காரன் ,ஆகியோருக்கான கவுன்ஸிலை உருவாக்கும் கூட்டம்










ஊர் மூப்பன், வண்டாரி, குறுதலை, மண்னுக்காரன், ஆகியோருக்கான கவுன்ஸிலை உருவாக்கும் கூட்டம் கடந்த 13 14 ஆகிய தேதிகளில் கோபனாரி குருஞ்சி கட்டிடமையத்தில் நடைபெற்றது இதில் 10 ஊரிலிருந்து 40தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக தங்களது பங்களிப்பை செலுத்தினர். சங்கரநாரயணன், மற்றும் செல்வதேவன், ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், ஆகியோர் இக்கூட்டத்தை வழிநடத்தினர். இரண்டுநாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர்களுக்கென்று ஒரு கவுன்சில் உருவாக்குவதென்று முடிவுசெய்யப்பட்டது. மேலும் பழைய அதிகாரங்களை மீட்டு அதை அமுல்படுத்துவதென்றும் முடிவுசெய்யப்பட்டது.

இப்படியொரு அமைப்பை ஏற்படுத்தும் எண்ணத்தை தந்த என் எம் சி டி ஆதி திட்டத்துக்கு, புதுக்காடு மூப்பன் காரை நன்றி தெரிவித்தனர். இது மிக அவசியம், இது எங்களுக்கு பலத்தை கொடுத்துள்ளதாக சீங்குழி வண்டாரி தெரிவித்தார்.

பின் ஊரின் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைத்து அவற்றை விவாதித்தனர்

வனச்செட்டில்மெண்டுக்குள் உள்ள கிராமங்களின் பிரச்சனைகளை தீர்க்க ரெவின்யூ கிராமங்களும், ரெவின்யூ கிராமங்களில் உள்ள பிரச்சனைகளி தீர்க்க செட்டில்மெண்ட் கிராமங்களும், ஒத்துழைக்கவேண்டும் என்று பட்டிசாலையின் மூப்பன் காளி விவாதத்தை தொடங்கிவைத்தார்

ஒன்று: கூடப்பட்டி மூப்பன் 25 வருடமாக மின்சாரமிலாமல் பாம்புகளோடும், பூரான்களோடும் வாழ்க்கை நடத்துவதாகவும் ,குழந்தைகள், பள்ளிப்பாடங்களை படிக்ககூட முடியவில்லை, சுற்றிலும் ஆறு வற்றாமல் ஓடுகிறது ஆனால் அதை எடுத்து விவசாயம் செய்ய முடியவில்லை, ஆகவே விரைவில் மூன்று பேஸ் கரண்டுக்கு ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியரை சந்திக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்

மேலும் ட்ரேக்டர் வழங்கியுள்ள வனத்துறைக்கும், தங்களை அன்போடு நடத்தும் மாவட்ட வன அலுவலர் அன்வர்தீனுக்கும் நன்றி தெரிவித்து, அவர் மாதிரி நல்லமனிதர்கள் இருந்தால் எல்லா பிரச்சனைகளும் சீக்கிரம் தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்

புதுக்காடின் காரை மூப்பன் தங்கள் ஊருக்கு ஒரு 10 hrs மோட்டர் இருந்தால் மற்றவற்றை நாங்களே சமாளித்துக்கொள்ள முடியும் என்று முடித்தார்

சீங்குழி மூப்பனும் வண்டாரியும் ரோடு வசதி சேங்ஷன் ஆகியும் அது ஏனோ முடிக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டார்

ஆலங்கண்டி மூப்பன் மருதனோ எங்கள் ஊரில் 44 வீட்டிற்க்கு மின்சாரவசதி செய்துதரப்படவில்லை அது முடிக்கப்பட மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டுமென்றார்

கோபனாரி குடுமியும் மூப்பன் லட்சுமணனும் மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு மின் வசதிக்கு அறவழியில் போராடப்போவதாக தெரிவித்தனர்

கொரவண்கண்டி குடிநீர்வசதியிம் பள்ளிகூட பசங்களுக்கு சாதி சான்றிதழும் விரைவாக ச்ய்யவெண்டும் என்றார்

சொரண்டி காளிமூப்பன் குடித்தண்ணீருக்கே தினமும் 3 கிலோ மீட்டர் நடக்கவேண்டியுள்ளது பட்டுவளர்சித்துறையால் அளிக்கப்பட்ட மோட்டாருக்கு நாங்கள் பில்கட்டவேண்டுமென்று மின்வாரியத்தனர் பீஸ்கட்டையை ப்டுங்கிப்போய்விடார்கள் என்று நா தழுக்க பேசிமுடித்த போது கூட்டம் அமைதியானது

பட்டிசாலையின் மூப்பன் தங்களூருக்கு ஒரு பால்வாடியும் தண்ணீர் வசதியும் வேண்டுமென்று கோரிக்கையை வைத்தார்

இப்படி தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை விவாதித்தனர்

· மூப்பன்ஸ் கவுன்சிலை மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை கூட்ட வேண்டும்

· இதை முறையாக அரசில் பதிவு செய்யவேண்டும்

· வனத்துறை திட்டங்கள் கொண்டுவரும்போது ஊர் மூப்பன்களை கலந்தாலோசிக்கவேண்டும்

· மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் விரைவாக கொடுக்கப்படவேண்டும்

· வனமகசூல் ஏலங்களில், வனத்துக்குள் கட்டப்படும் கடுமானப்பணிகளில் ஆதீவவசிகளுக்கு முன்னுரிமை தரப்படவேண்டும்

· மாட்டுச்சாணங்கள் சேகரித்து அவற்றை நாமே விற்பனை செய்யவேண்டும்

· வெள்ளாமையை வட்டிக்காரர்களிடம் இழந்துவிடாமல் இருக்க ஒரு விதை வங்கியை உருவாக்கி நாமே நடத்த வேண்டும்

· தோலம்பாளையம் வெள்ளியங்காடு ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள ஆதிவாசிகள் கிராமங்களை உள்ளடக்கி ,ஒன்றாக்கி ஒரு ஆதிவாசிகள் பஞ்சாயத்தை அரசு அறிவிக்கவேண்டும்

· வனசட்டத்தை அமுல்படுத்தவேண்டும்

· யானைகளிடம் இருந்து விளைச்சலை காக்க டிச்சு(அகழி) அல்லது குறைந்த மின்னழுத்தமுள்ள மின்சாரவேலிகளை அரசு அமைத்துக்கொடுக்கவேண்டும்

· பெரும்பாலும் தண்டணைக்காக இப்பகுதிக்கு ஆசிரியர்கள் மாற்றப்படுவதால் குழந்தைகளுக்கு தனிப்பயிர்சி அளிக்க அரசு உதவ வேண்டும்

மிகவும் சாதரணமான, நியாயமான,மிக அடிப்படையான கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர்இந்த ஆதிவாசி தலைவர்கள் . இவற்றை அரசு மிக எளிதாக செய்யமுடியும், இவற்றை தனியார் கம்பனிகளைக் கூட CSP component ல் செய்யவைக்க அரசால் முடியும், செய்யுமா இந்த அரசு?



களப்பணியாளர்கள் செல்வன் மற்றும் சுமதி கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்