Sunday, September 28, 2008

தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய இரண்டு நாள் பயிற்சி






தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய தகவல்கள் எட்டாத, எந்த செல்போனுக்கும் டவர் கிட்டாத கிராமங்களில், தட்டுத்தடுமாரி, எட்டோ, பத்தோ, படித்துவிட்ட ஆதிவாசி பசங்களுக்கும், பெண்களுக்கும் அத்துப்படியாக தெரிந்திருக்கிறது என்றால், நமக்கு கொஞ்சமல்ல நிரையவே ஆச்சரியம் பொத்துக்கொள்ளுமா கொள்ளாதா நிச்சயமாக அப்படித்தான்

என்ம்சிடி ஆதி திட்டம் மூலமாக ஒரு முயற்சியாக நமது பசங்களுக்கும் பெண்களுக்கும் இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய வகுப்பை எடுக்கும் பொறுpu வழக்குரைஞர் ஆனந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது அவர்தான் கோவையில் இன்னக்கி இதில் நல்ல எக்ஸ்பெர்ட் ஆன இளசு. ரொம்ப அர்பணிப்புள்ள ஒரு நண்பர்

அவ்வளவுதான் மனிதர் படு சுறுசுறுப்பாகிவிட்டார் உடனே பயிற்சிக்கு வருபவர்கள் பற்றிய சில கிரிட்டீரியாக்களை கொடுத்து இதன்படிதான் பயிற்சி நடக்கவேண்டும் இப்படிப்பட்டவர்கள்தான் பயிற்சியில் கலந்துகொள்ளவேண்டும் இல்லையென்றால் நான் வரமுடியாது என்று ஒரேபோடாய் போட்டுவிட்டு நடந்துபோய்விட்டார்

அதன்படி படித்த இளைஞர்களையும் ஓரளவு எழுதத்தெரிந்த இளசுகளையும் இணைத்து பட்டியலை களப்பணியாளர்கள் சுமதியும் செல்வனும் டிக்செய்து தகவல் கொடுத்துவைத்தனர்

சொன்னவுடன் பட்டிசாலை செயப்பிரகாசும் வெற்றியும் வேகமாகிவிட்டனர் அதன் விளைவுகள் பற்றியும் விவாதிக்க தொடங்கிவிட்டனர்

ஆனந்தன் அவர்கள் கொடுத்தநாள் நம்ம பசங்களுக்கு ஒத்துவராத நாளாய் இருந்ததது. அவரிடம் சொன்னேன் உங்களுக்கு சவுகரியமான நாள் ஒன்றை குறித்து தாருங்கள் நான் வருகிறேன் என்றார், வண்டி ஏதாவது அரேஞ் செய்யனுமா ? அதுமாதிரி என்னை யாரும் வாழ்கையில் முறைத்ததில்லை. ‘சாரி’ சொல்லிவிட்டு தேதியையும் முகவரியையும் கொடுத்துவிட்டு வண்டியை கிளப்பிவிட்டேன்

சரியாக 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு மனுசன் பயிற்சிநடக்கும் கோபனாரிக்கே வந்துவிட்டார்,ஆனால் பசங்கள் 10.30க்குத்தான் வந்தார்கள் என்பது வேறுவிசயம் இடைப்பட்ட நேரத்தில் எல்லாம் பேசினார் திட்டங்களை கேட்டறிந்தார் சில தொடர்புகளை கொடுத்தார் ஊரில் உள்ள பிரச்சனைகளை அலசினார்

சரியாக பத்து முப்பதுக்கு உள்ளே வந்தவர் சாப்பிடும்வரை இளசுகளை தன் வகுப்பால் கட்டிப்போட்டார் அனுபவங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வரலாறு, அதில் கிடைத்த வெற்றிகள், தடைகள் மேல்முறையீடு ஆகியவை பற்றி மிகவும் எளிமையாக செயல்படுத்திக்காட்டினார்

பின் பங்கேர்ப்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளங்கும் வண்ணம் பதில் கொடுத்தார்

மதிய சாப்பாட்டை பங்கேற்ப்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உற்சாகமளித்தார்

பின் பேக்கில் இருந்து மாதிரி படிவங்களை எடுத்து குழுவாகப்பிரித்து கொடுத்து நிரப்பசொன்னார் அதில் ஏற்ப்பட்ட தவறுகளை சுட்டிக்காடினார் சிலவற்றில் உள்ள நுணுக்கமான பிழைகளை சுட்டி அது எவ்வாறு நமக்குதேவைப்படும் தகவல் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று விளக்கினார்

* தகவல் படிவத்தில் நீதிமன்ற வில்லை (கோர்ட்ஸ்டாம்)10 ரூபாய்க்கு ஒட்டப்படவேண்டும்

* எப்போதும் தகவல்கள் கேட்கும் போது அன்றைய நாள் வரை உள்ள தகவல்களை கேட்கவேண்டும்

* எதிர்காலத்தில் எப்போது நடக்கும் என்பது போன்ற தகவல்களை கேட்ககூடாது (உம் :எப்போது பாலம் கட்டுவீர்கள்) அதற்க்கு பதிலாக பாலம் கட்ட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்கலாம்

* தகவல் முப்பது நாட்களுக்குள்அச்சு வடிவில் தரப்படவேண்டும்

* அதிகாரி தகவல் தர தவறினால் 31 ஆம் நாளில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூபாய் 250 அபராதம் கட்டவேண்டும் இது மொத்தமாக 25000த்துக்கு மிகாமல் இருக்கும்

* தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் இன்னொரு சாதகம் நாம் தகவல் கோரும் அதிகாரியிடம் நாம் கேட்கும் தகவல்கள் இல்லையெனில் அவரே அது சம்பந்தப்பட்ட துறைக்கு forward செய்துவிட்டு நமக்கு தகவல் அளிக்கவேண்டும் நீங்கள்
பெற விரும்பும் தகவல் இன்னொரு அரசு அலுவலகம் சார்ந்தது எனில், தகவல் லுவலரே உங்களது விண்ணப்பத்தை உரிய இடத்திற்கு அனுப்பி வைப்பார். இது ஐந்து நாட்களுக்குள் செய்யப்படும்
.

* தகவல் மேல்முறையீட்டு அலுவலர்களும் இதில் உள்ளனர்

* நீங்கள் அத்தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்கும் உரிமை பொது தகவல் அலுவலர்க்குக் கிடையாது

* இரண்டாம் முறையீடு முதல் முறையீட்டின் முடிவு எடுக்கப்பட்ட
தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள்ளும் செய்ய உரிமை உண்டு.

* நீங்கள் பெற விரும்பும் தகவல் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் உட்பட தகவல் உரிமை சட்டம் பிரிவு 8 மற்றும் 9 களில் விலக்களிக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றியெனில் உங்கள் விண்ணப்பம் தகுந்த காரணங்களை விளக்கி நிராகரிக்கப்படும்

* அரசு ஆணை (GO) எண்கள் 1042, 1043, 1044, மற்றும் 1045 களின் படி, குற்றப்புலனாய்வுத்துறை, தனிப்பிரிவு, பாதுகாப்புப்பிரிவு உட்பட 30 அரசு அலுவலகங்களை, தகவல் உரிமைச் சட்டம் மூலமாக, தகவல் பெற அணுக முடியாது.

முதல் நாள் இச் ச்ட்டத்தின் வரலாறும் அனுபவங்களையும் கொண்டு நகர்த்திய ஆனந்த ராஜ் இரண்டாம் நாள் முழுக்க செயல் முறைகளை கையாண்டு அவர்களுக்குள்ளும் பல ஆனந்தராஜை உருவாக்கிவிட்டார் இரண்டு நாட்கள் மிகப்பயனுள்ளதாக இருந்த்தாக இளசுகள் மிகவும் புளகாங்கிதம் அடைந்தது மட்டுமல்லாது செயலில் இறங்கினர்