Monday, September 7, 2009

அரக்கடவு இளையோர்- இப்போது டேலியில்





அரக்கடவு கிராமத்தின் கலைவாணிக்கும் சங்கீதாவுக்கும் நேற்றுவரை கம்யூட்டர் பழகுவதென்பது கனவாகவே இருந்துவந்த்தது

என் எம் சி டி ஆதி திட்ட அழைப்பை ஏற்று 13 .1 2009 அன்று கோவையில் உள்ள AIMS ( All India institute for medical and science நிறுவனத்தின் கோவை பிரிவின் பொறுப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் இளையோர் கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

அதில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் உலகமயமாக்கல் சூழ்நிலையில் உயர் கல்வியற்றோரின் இடம் பரிபோகும் சூழ்நிலைகுறித்தும் மிகவிரிவான கருத்துரையை வழங்கினர்

அதில கலந்துகொண்ட உறுப்பினர்களில் பலர் இன்று தொலைதூரக்கல்வி மூலம் மேல்படிப்பை தொடர்கின்றனர் பலர் பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சி செல்ல ஆர்வமாகினர்
அவர்களை தரம் பிரித்து 4 உறுப்பினர்களை திறன் வளர்ப்பு பயிற்சிக்கும் 2 உறுப்பினர்ளை கணிணி பயிர்சிக்கும் அனுப்புவது என்றூம் 4 நபர்கள் பத்தாம் நிலை தேர்வு எழுதுவதென்றும் 7 நபர்கள் தொலைதூரக்கல்வி நிலையங்கல் மூலமாக பட்டப்படிப்பை மேற்கொள்வது என்று முடிவு செய்து அதில் கல்வியை தொடர்வதற்க்கான சாத்தியங்கள் குரித்து ஆய்வுசெய்யப்பட்டது
அதில் மையங்களாக

1அம்பேத்கார்சுய வேலைவாய்ப்பு மையம்
2 ஆல்பா கணிணி மையம் ,
3 தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம்
ஆகியவை தெரிவு செய்யப்பட்டது
பிறகு என் எம் சிடி களப்பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கலின் வழிகாட்டுதலின் படி இந்நிறுவனங்களை அணுகி கோரிக்கை வைத்தனர்

அம்பேத்கார் சுய வேலை வாய்ப்பு மையம் கனரா வங்கியால் நடத்தப்படுவது அம்மையத்தில் விண்ணப்பிக்கும் போது அதன் இயக்குநர் தியாகராஜன்
எவ்வளவு மாணவர்கள் வந்தாலும் அவர்களுக்கு இடம் அளிப்பதாக உறுதி கூறி தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றை கட்டணமின்றி வழங்குவதாக தெரிவித்தார் அங்கு இப்போது எலக்ட்ரீசியன் பயிற்சியை இருவர் மேற்கொண்டு வருகிறார்கள்


பட்டப்படிப்பிற்க்கு இப்போது மூன்று நபர்கள் அஞ்சல் வழிக்கல்வியின் மூலமாக பயின்று வருகிறார்கள் மேலும் பலர் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்

4 நபர்கள் பத்தாம் நிலை தேர்வு எழுதுவதற்க்கான த்யாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்
ஆனால் கணிணி வகுப்பிற்க்கு இரண்டு கோர்ஸ் இரண்டு நபர்களுக்கு 6000 ம் கட்டணம் செலுத்தவேண்டும் என கூறினர் அதனால் CCC கம்யூட்டர் நிறுவனத்தில் அனுகி நிலைமையை விளக்கி சொல்லிய பிறகு C3 கணிணி மையமும் மாணவர்களை கட்டணமின்றி ஏறுக்கொள்வதாக உறுதியளித்து

வெள்ளியங்காடு பஞ்சாயத்தில் உள்ள அரக்கடவு கிராமத்தை சேர்ந்த கலைவாணியுசங்கீதா வும் 21.1.2009 அன்று இணைந்தனர்
அரக்கடவு கிராமம் வனக்கிராமம் சரியான பாதைகள் கிடையாது மிக நீண்ட தொலைவு கடுமையான வனத்தை கடந்து செல்லவேண்டும் முதன் முதலில் இப்படியொரு வாய்பை அவர்களுக்கு வழங்கியபோது பாதை தொலைவுயையும் பணமின்மைய்யையும் காரணம் காட்டி படிப்பை விட்டு விலகியிருந்த அவர்கள் இருவரும் இப்போது முதல் கட்ட பயிற்சியியை முடித்து இரண்டாம் கட்ட பயிற்சிக்குள் நுழைந்துள்ளனர்
ஆதி திட்டத்தில் கிடைத்த பட்டறிவு, தொடர்பு இளையோர்களுக்கான கல்வி குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் அவர்களை கல்வி குறித்து மிகவும் யோசிக்க வைத்திருக்கிறது எல்லா கார்ணங்களையும் விலக்கிவிட்டு இப்போது நடைமுறைகளை யோசிக்க ஆரம்பித்துள்ளனர்